tamilnadu

img

‘கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய ரத்தத்தில் எச்ஐவி இல்லை

மதுரை,ஆக.20- கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப் பட்ட ரத்தத்தில் எச்ஐவி தொற்று  இல்லை என உறுதி செய்யப் பட்டுள்ளதாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரி வித்துள்ளார். உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணிப் பெண், கடந்த 17 ஆம் தேதி உடல் பரிசோ தனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். பரிசோத னையில் அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதுடன், மஞ்சள் காமாலை கிருமி உள்ளதாகக் கூறி, மருத்து வர்கள் ரத்தம் ஏற்றியுள்ளனர்.

சிறிது நேரத்தில் கர்ப்பிணி உடலில் அரிப்பு ஏற்பட்டு, முகம்,  கை கால் வீங்கியதாக கூறப்படு கிறது. இதை பார்த்ததும் எச்ஐவி  தொற்று உள்ள ரத்தத்தை ஏற்றி யிருக்கலாம் என்று பெற் றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள் ளது. இதனையடுத்து கர்ப்பிணி யை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனு மதித்து, ரத்த பரிசோதனை செய்ய ப்பட்டது. அதில் அவருக்கு 100 சதவீதம் எச்ஐவி தொற்று   இல்லை  என்பது தெரியவந்துள்ளதாகவும்  ரத்தம் ஏற்றியதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்று மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா தெரிவித்துள்ளார்.