tamilnadu

img

சொத்து என்ன சொத்தடா

சொத்து என்ன சொத்தடா

சுடலைக்குள்ளும் நெத்திக் காசடா.

அக்கடா என்று அமைதி கொள்பவன் எங்கடா?

     நகத்தின் அழுக்கையும்

     நாணயமாய் ஆக்கி வைக்கும்.

     கழுத்து வரை மட்டுமா?

     காதுவரை மூழ்கடிக்கும்.

(சொத்து)

மலர்களின் மணத்தையும்

மழலைகள் குணத்தையும்

     நுகர விரும்பி விட சிந்தை வை!

"ஆகா காசுகள்!

ஆண்டவர் ஏசுகள்!

     துதிப்போம்" என்பவரை தூர வை!

மனிதனை நேராக ஆக்கணுமே.

மலர்களை பொன்னாக நோக்கணுமே.

(சொத்து)

தவளை கற்களும்

தண்ணீரில் தாவுமே!

     தாவுமோ காசுகள் மானிடா?

தாவாத காசினை

தாவி தாவி நீ

     தேடி அலைந்திடுதல் ஏனடா?

ஏழரை நாட்டுச் சனி இல்லை இல்லை!

இந்த காசுச் சனி ஆயுள் தொல்லை.

(சொத்து)

மகரந்தத்துக்கு

தங்கமா மாற்று?  

     மகரந்தம் பொன்னை விட மேலையா.

மாறுதலுக்காக நீ

தேறுதலுக்காக பொன்

     சிட்டிகை சிறிதெடு ராசையா!

வீணை நரம்புக்கு தங்கமாக

வேண்டுமென் றால் தடவு கொஞ்சமாக!

(சொத்து)