tamilnadu

img

தமிழக அரசின் ஒப்பந்தப் பண்ணையம் - சேவைகள் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி

உடனே அமல்படுத்த முதல்வர் உத்தரவு 

சென்னை,அக்.29- தமிழக அரசால் இயற்றப்பட்ட ஒப்பந்தப்  பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டத் திற்கு குடியரசு தலைவர் அனுமதி அளித்துள் ளார். இதைத்தொடர்ந்து சட்டத்தை உடனடி யாக செயல்பாட்டிற்கு கொண்டு வர முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். ஒப்பந்த சாகுபடி முறையில் ஈடுபடும் வேளாண் பெருமக்களின் நலனைப் பாது காக்க சட்டம் இயற்றப்படும் என 2018 - 2019 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால் நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவை கள் சட்ட முன்வடிவு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.அந்த சட்டத்திற்கு தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்தின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பின்  சுருக்கம் வருமாறு: அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று பிரத்யேகமாக எந்த சட்டமும் எந்த மாநிலத்திலும் இது வரை இயற்றப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனிச் சட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு. கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள் அல்லது உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளைபொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை ஒப்பந்தம் செய்த அன்று,  நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற் றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளர் அந்தப் பகுதியை சார்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையினால் அனுமதிக்கப்பட்ட அலு வலரிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தினை அலுவலர் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த சட்டத்தினை விரைவில் நடை முறைக்கு கொண்டு வருவதற்கான சட்ட  விதிகளை உடனடியாக வகுத்து, முழுச் செயலாக்கத்திற்கு கொண்டு வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.