சேலம்,மார்ச் 4- மழைக் காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு சேலம் மாவட்டத்தில் வறட்சிப் பகுதி களில் உள்ள 100 ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்பும் வகையிலான 565 கோடி ரூபாய் மதிப்பிலான சரபங்கா நீரேற்றுத் திட்டம் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த இருப்பாளி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரபங்கா நீரேற்றுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான இத்திட்டத்தின் மூலம் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் சுற்று வட்டாரங்களில் 100 ஏரிகள் நிரப்பப்பட வுள்ளன. இதன்மூலம் 4238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் முதலமைச்சர் பேசுகை யில், சாரபங்கா திட்டம் 11 மாதங்களில் நிறைவேற்றப்படும். சரபங்கா திட்டத்தை முன்மாதிரி யாக கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நீரேற்று திட்டங்கள் செயல் படுத்தப்படும்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தான் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா முதலமைச் சர்கள் சந்தித்துப் பேசி அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.