tamilnadu

img

ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் போட்டது அதிமுகதான்

காங்.தலைவர்  அழகிரி குற்றச்சாட்டு

திண்டுக்கல், டிச.10- பண்ருட்டி வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சித்  தலைவர் பதவி ஏலம் போய் இருக்கிறது.  ஏலத்தை  நடத்தியது அதிமுக தான் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார். திண்டுக்கல்லில் செவ்வாயன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-  “குடியுரிமை மசோதா”-வை பாஜக நிறைவேற்றியது நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போலாகும். நாட்டை அழிப்பதற்கு குடியுரிமை மசோதா ஒன்றே போதும். 50 ஆண்டுகள்  இந்தியாவில் வசித்து வந்த ஒருவர் தான் ஒரு இந்தியவர் என்பதை நிரு பிக்க வேண்டிய அவசியம் உருவாகி யிருக்கிறது. வங்காளதேசம், இலங்கை, பர்மா, பாகிஸ்தான், நேபாளம் உட்பட உலகில் எந்தப் பகுதியிலிருந்தோ 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறியவர்களை இப்போது கணக்கெடுத்து இந்தியர்களா? இந்தி யர்கள் அல்லரா? என்று ஆராய்ந்து அவர்களை அவர்களது நாடுகளுக்கு அனுப்புவது  இந்திய அரசியல் சட்டப்படி தவறு. 

குடியுரிமை மசோதாவின் மூலம் மத்திய அரசு திட்டமிட்டு வன்முறை யை உருவாக்குகிறது. இலங்கையில் இனக்கலவரம் நடந்த பொழுது ஏறக் குறைய இரண்டு லட்சம் தமிழர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர் களுக்கு அரசாங்கம் எல்லா உரிமை களையும் கொடுத்திருக்கிறது. மத்திய அரசின்  குடியுரிமைச் சட்டம் நாட்டை விட்டு அவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறது.  வெளிநாடுகளிலிருந்து இந்தியா விற்கு யாரும் வரக்கூடாது என்று பாஜக விரும்பலாம். இருபது லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். சிங்கப்பூர்,  மலேசியா, துபாய், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அந்த நாடுகளும் இது போல்  ஒரு சட்டம் இயற்றி அங்குள்ள இந்தியர்களை திருப்பி அனுப்புவார்கள். 

சுயமரியாதை இல்லாத எடப்பாடி அரசு

குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்துள்ளது.  ஜெயலலிதா ஒரு காலத்தில் பாஜக-வின் நடவடிக்கை களை லேடியா? மோடியா? என்று கேட்டார். இன்றைக்கு அதிமுக கைகட்டி, கூனிக் குறுகி பாஜகவிடம் நிற்கிறது. எடப்பாடி அரசுக்கு சுயமரியாதை இல்லை. நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நாளில் நடத்த முடியும் என்றால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏன் இரண்டு முறை பணம் விரயம் செய்ய வேண்டும்? தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் எதையுமே சிந்திப்பதில்லை. அவர்களுக்கு எது லாபகரமாக இருக்கிறதோ அதை மட்டும் செய்கிறார்கள். 

உள்ளாட்சித்தேர்தல் முடிவு பணபலம், அதிகார பலம், ஆள்பலம் உள்ளவர்களுக்குத் தான் சாதகமாக அமையும். மக்கள் பங்கேற்காத எந்தத் தேர்தலும் மக்களாட்சியைக் கொண்டு வராது.  பண்ருட்டி வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சித்  தலைவர் பதவி ஏலம் போயிருக்கிறது.  ஏலத்தை நடத்தியது அதிமுக தான்.  உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராகவோ, வேண்டாமென்றோ நாங்கள் வழக்குத் தொடுக்கவில்லை. தேர்தலை முறையாக நடத்த வேண்டுமென்று  சொல்கிறோம். இட ஒதுக்கீட்டை தமிழக தேர்தல் ஆணை யம் முறையாக அமலாக்கவில்லை  அமைச்சர் ஜெயக்குமார் எதிர்க்கட்சி யினரை குழப்பவாதி என்கிறார்.  குழப்ப வாதி அதிமுக தானே ஒழிய திமுகவே, எதிர்கட்சிகளோ அல்ல என்றார். இவ்வாறு அவர் கூறினார்.