tamilnadu

img

‘கடல் வாணிபத்தில் சிறந்த தமிழர்கள்’‘

பிரான்ஸ் மானுடவியலாளர் ரோமன் சைமனஸ் பேட்டி

பழனி, செப்.23- எகிப்து நாட்டில் மம்மி சிலைகள் செய்ய ஏலக்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் தமிழகத்தில் மட்டுமே ஏலக்காய் சாகுபடி நடந்துள்ளது. தமிழர்கள் கடல்வழி வாணிபத்தில் மேலோங்கியவர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் ரோமைன் சைமனஸ் கூறினார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவிய லாளர் ரோமைன் சைமனஸ்  பழனி முருகன் கோவில், போகர் சித்தர், தமிழ் பழங்குடிகள் குறித்து பழங்கால மக்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் நெய்க்காரப்பட்டி அருகே உள்ள இரவி மங்கலம் பகுதியில் ஞாயிறன்று ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இரவிமங்கலம் பகுதியில், தமிழர்கள் பல்லா யிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த தற்கான சுவடுகள் உள்ளன. ஆப்பிரிக்கக் கருப்பின மக்களின் மரபணு (டி.என்.ஏ.) தமிழக பழங்குடியின இருளர் இன மக்களின் மரபணு வோடும், எகிப்து மக்களின் மரபணு தமிழகத்தில் வாழும் இதர பழங்குடியின மக்களின் மரபணு வோடும் ஒத்துப்போகிறது. எகிப்து நாட்டில் மம்மி சிலைகள் செய்ய ஏலக்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் தமிழகத்தில் மட்டுமே ஏலக்காய் சாகுபடி நடந்துள்ளது. தமிழர்கள் கடல்வழி வாணிபத்தில் மேலோங்கியவர்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 

எகிப்து நாட்டு பழங்குடிகளின் பழக்க வழக்கங்கள், தமிழர்களின் பழக்க வழக்கங்க ளோடு பெரும்பாலும் ஒத்துள்ளது. எகிப்து பழங்குடியின ஆண்கள் தமிழக ஆண்கள் அணியும் வேட்டியைப் போன்ற உடையையே அணிந்து வந்துள்ளனர். பிற்காலத்தில் ஐரோப்பி யர்களின் ஆதிக்கத்தால் தமிழர்களின் கடல் ஆதிக்கம் குறைந்துள்ளது. தமிழர் பண்பாடு தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இந்தியா முழுவதும் தமி ழர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. அடுத்தடுத்து  தொடர்ந்து ஆய்வு கள் மேற்கொள்ளப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பழனி  தொல்லியல் ஆராய்ச்சி யாளர் நாராயணமூர்த்தி உடனிருந்தார்.