என்.சங்கரய்யா அழைப்பு
சென்னை, மார்ச் 13- மார்க்சிய இலக்கிய மாத இதழான செம்மலரின் பொன்விழா மார்ச் 15 ஞாயிறன்று மதுரையில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரான என்.சங்கரய்யா விடம் தீக்கதிர் பொது மேலாளர் சி.கல்யாணசுந்தரம், செம்மலர் மூத்த துணை ஆசிரியர் அ.கும ரேசன் ஆகியோர் வழங்கினர். அப்போது செம்மலர் பொன்விழா மகத்தான வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த என்.சங்கரய்யா, இரண்டு ஆண்டுகளுக்கான சந்தா தொகையையும் அளித்தார்.
தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அணிகளும் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும், முற்போக்கு இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் செம்மலர் இதழுக்கு பல்லாயிரக்கணக்கில் சந்தாதாரர்களை சேர்த்து, பொன் விழா ஆண்டில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் செம்மலர் தடம்பதிக்க பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.