tamilnadu

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளருக்கு ஏற்றுக் கூலியை ஒரேமாதிரி வழங்கக் கோரிக்கை

கரூர், ஜூலை 23- தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களின் மாநில ஒருங்கி ணைப்புக் குழு கூட்டம், கரூர் மாவட்டம் மாயனூரில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.பிச்சைமுத்து தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர்  சி.முருகேசன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலை வர் எஸ்.குணசேகரன் எதிர்காலப் பணிகள் குறித்து பேசினார். மாநில  பொதுச் செயலாளர் பி.வெங்கடபதி சிறப்புரையாற்றினார். டாஸ்மாக்  சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவர் ஏ.விநாயகம் நன்றி கூறினார். மண்டல நிர்வாகிகள் பீர்முகமது, முகமதுல்லா, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டாஸ்மாக் குடோனில் தமிழகம் முழுவதும் உள்ள சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஏற்றுக் கூலியை ஒரே மாதிரியாக வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் உள்ள தொழிலாளர்களுக்கு அடை யாள அட்டை, குடிநீர், ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்  லாத இடங்களில் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். இறக்குக்  கூலி சம்பந்தமாக நவம்பர் மாதம் கோரிக்கை மாநாட்டை நடத்தி தொடர்ந்து  போராட்டங்களை நடத்துவது என்றும் அதன் மூலம் கோரிக்கைகளை வெற்றி பெறுவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டது.