tamilnadu

img

உரிமைகளை மறுத்து, ஊர்சுற்றி ஏமாற்றும் தமிழக அரசு!

மாற்றுத்திறனாளிகள் சங்கம் விமர்சனம்

சென்னை, டிச. 2 - மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை களை வழங்காமலும் சமூக நலத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றாமலும் ஊர்சுற்றி காட்டும் முதல்வ ரின் செயலை தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம் விமர்சித் துள்ளது. இது தொடர்பாக அமைப்பின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் திங்களன்று (டிச.2) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊனமுற்றோர் உரிமைகளுக்கான ஐ.நா.  மாநாட்டு விதிகளை  மத்திய, மாநில அரசுகள் சட்டமாக மதித்துசெயல்படவில்லை. ஊன முற்றோர் உரிமைகள் சட்டம்-2016ஐ முழுமை யாக செயல்படுத்த தமிழக அரசு உரிய விதிகளைக் கூட உருவாக்காமல் உள்ளது. இதுகுறித்து சங்க நிர்வாகிகளோடு பேசிய சமூக நலத்துறை அமைச்சர் மரு.சரோஜா அளித்த வாக்குறுதி நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும், துறைகளிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஊன முற்றோருக்கான பல்நோக்கு சான்று (யுடி ஐடி) வழங்கும் திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகும் 2 சதவீத மாறுத்திறனாளிகளுக்குக் கூட அந்தச் சான்றை வழங்கவில்லை. மாற்றுத்திறன் மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும் வகையில் தமிழக  அரசு 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு களை கொண்டு வந்துள்ளது. கல்விக்கூடங் களை நோக்கி  ஓரளவு வரும் மாற்றுத்திறன் குழந்தைகளையும் துரத்தும் வேளையில் இறங்கியுள்ளது. மாற்றுத்திறன் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகாரித்து வருவதை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளோம். உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அண்மையில் சுட்டிக்காட்டியது. ஆனாலும் அவற்றை தடுக்க உரிய நடவ டிக்கைகளை எடுக்க அரசு வேகம் காட்ட வில்லை. 

ஊனமுற்றோர் உரிமை சட்ட விதிகளை செயல்படுத்த மறுக்கும் தமிழக அரசு, ஊரை  ஏமாற்றும் விதத்தில்,  உலக தினத்தில் சில மாற்றுத்திறனாளிகளை மட்டும் அமைச்சரும் அதிகாரிகளும் அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி காண்பிக்க முயற்சிக்கின்றனர். இது வெட்கக் கேடான செயல்.  மாற்றுத்திறனாளிகளை முட்டாள்க ளாக்கி கேலி செய்வது போல் உள்ளது. இப்படிப்பட்ட அநாகரிக செயல்களை தமிழக  அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.