உதகை,டிச.13- புத்தாண்டு, பொங்கல் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை - மேட்டுப்பாளையம் இடையே 13 நாட்களுக்கு, 132 இருக்கைகள் கொண்ட சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன் பதிவு வெள்ளியன்று(டிச.13) தொடங் கியது. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு ஜன வரி 4 ஆம் தேதி முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும், உதகையிலிருந்து- மேட்டுப்பாளையத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மலை ரயில் மதியம் 2.30 மணிக்கு உதகை வந்து சேரும். பின்னர் அடுத்த நாள் உதகையி லிருந்து பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் போய் சேரும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.