சென்னை, ஆக.26- தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி ஒளி பரப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி மாண வர்கள் தொலைக்காட்சி பார்ப்பதால் சரியாகப் படிப்ப தில்லை என குறைகூறும் நிலை மாறி, மாணவர்கள் படிப்பதற்கு உதவும் தொலைக்காட்சி தொடங் கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடை பெற்றது. பேரவைத் தலை வர் ப.தனபால், துணை முத லமைச்சர் ஓ.பன்னீர்செல் வம், அமைச்சர்கள் செங் கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், கல்வித் தொலைக்காட்சி ஒளி பரப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
உலகளவில் 31 கல்வி தொலைக்காட்சிகள் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலை யில் தமிழில் முதன் முறை யாக இந்த கல்வித் தொலைக் காட்சி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக உலக சாதனை களை அங்கீகரிக்கும் Unique World Record என்ற அமைப்பு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு விருதை கொடுத்தது. இந்த விருதையும், இதற்கான சான்றிதழையும் அந்த நிறுவனத்தின் தலைமை தீர்ப்பாளர் ரகு மான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி னார்.