இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்கலைக்கழகங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற்றது. இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேரவைத் தலைவர் ஆயிஷ்கோஷ், முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகம்), பாலசசிகுமார் (மதிமுக மாணவர் அணி), மத்தியக் குழு உறுப்பினர்கள் சத்யா, ஜான்சி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் நிறைவுரையாற்றினார்.இதில் மாநில நிர்வாகிகள் ம.கண்ணன், க.நிருபன் சக்கரவர்த்தி, ஆறு.பிரகாஷ், தீ.சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் விக்னேஸ்வரன் வரவேற்றார். வடசென்னை மாவட்டச் செயலாளர் இசக்கி நாகராஜ் நன்றி கூறினார்.