tamilnadu

img

பாதுகாப்புக்கு 6 கம்பெனி துணை ராணுவம் தேவை : தேர்தல் அதிகாரி

சட்டமன்ற இடைத்தேர்தல்: 


 சென்னை,அக்.1- இடைத்தேர்தல் நடைபெறும் நாங்கு நேரி மற்றும் விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பாது காப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணு வம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், வாக்காளர் பட்டிய லில் பெயர் மற்றும் முகவரி திருத்தத்திற் கான காலக்கெடு நேற்றுடன் முடிவடை ந்த நிலையில் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் சரிபார்ப்புப் திட்டத்தில் இதுவரை 23 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் பெயர் மற்றும் முகவரியை சரி பார்க்கப்பட்டுள் ளது. செல்போன் செயலி மூலம் மட்டும் 9 லட்சம் பேரும், சேவை மையம் மூலம் 12 லட்சத்து 85 ஆயிரம் பேரும் பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்துள்ளதாக தெரிவித்தார்.

;