tamilnadu

img

சாத்தான்குளம் தந்தை-மகன்  கொலை வழக்கு... காவலர்கள், மருத்துவர்கள் உட்பட  105 பேர் சாட்சிகளாக சேர்ப்பு....

மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேரும்சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இரண்டும் பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்தியசி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்உள்பட பத்து காவலர்களை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.  தற்போது இந்தவழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான காவல் சிறப்பு ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற ஒன்பது பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்தவழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  இந்த கொலை வழக்கில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக் காவலர்பியூலா, ரேவதி உள்ளிட்டஆறு காவலர்களும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் இதில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.