சென்னை, செப். 6- தமிழகம் முழுவதும் ஊரகப் பள்ளி களில் பாதுகாப்புச் சுவர்கள் கட்ட 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளி வளாகங்களுக்கு 250 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ. 144 கோடியே 50 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர்கள் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளுக்காக ரூ. 144 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர்கள் கட்டுவதன் மூலம் பள்ளிகளுக்குள் அன்னியர் நுழைவதை தடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் படிப்பை தொடர வழி வகுக்கும் என்றும் அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம், வெள்ளம் ஆகியவற்றில் இருந்து பள்ளியை காக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களி லும் இந்த பணிகளை விரைவாக தொடங்கி குறித்த நேரத்திற்குள் முடிக்க ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தர விட்டுள்ளார்.