உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உரிய மரியாதை: முதல்வர்
சென்னை, ஏப்.22- கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்குஉள்ளாகி மருத்துவர்கள், செவிலி யர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாநிலத்தில் நிலவும் கொரோனா தொற்று குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறை செயலளர் பீலா ராஜேஷ், மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் அரும் பணியாற்றி வரும் மருத்துவத் துறைசார்ந்த பணியா ளர்கள் எவரேனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயி ரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டம் மூலம் வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த போர்க் காலப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத் துறைகளான மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களும் கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுநோய்த் தொற்றுக்குஉள்ளாகி உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு நான் ஏற்கனவே அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.
உரிய மரியாதை
தன்னலமற்ற பணியை முன்னின்று செய்யும் மேற்சொன்ன நபர்கள் தனியார் மற்றும் அரசுத் துறையிலிருந்து இறப்பை சந்திக்க நேர்ந்தால் அவர் களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமை என்பதை கருத்தில் கொண்டு உயிரிழந்த வர்களின் உடலைப் பாதுகாப்புடனும், உரிய மரியாதை யுடனும் அடக்கம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
விருதுகள்
கொரோனோ தொற்று தடுப்பு பணியில் பணி யாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவி லியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இப்பணி யில் ஈடுபட்டுள்ள பிறதுறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணி யாளர்களில் எவருக்கேனும் கொரோனோ தொற்று ஏற்பட்டால், மருத்துவத் துறையின் வழிகாட்டி நெறிமுறை களுக்கு ஏற்ப அந்த மருத்துவப் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை செய்யவும், அந்த மருத்துவமனையின் பிரிவில் முழுமையாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்குப் பிறகு மீண்டும் அப்பிரிவில் மருத்துவப் பணிகளைத் தொடரவும் அனுமதிக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.