கடைமடைப் பாசனம்
தஞ்சாவூர் செப்.23- கடைமடைப் பகுதி பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்வது குறித்து, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேராவூரணியில் கடைமடைப் பகுதிவிவசாயிகள், பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கடந்த ஆக.13 ஆம் தேதி அன்று மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையிலிருந்து ஆக.17 அன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதி களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என கடைமடைப் பகுதி விவசாயிகள், விவசாயிகள் சங்கங்கள் குற்றம்சாட்டி வந்தனர். முறை வைத்து தண்ணீர்விடப்படுவ தால் சாகுபடி பணிகளில் தாமதம் ஏற்பட்டது. மேலும் கடைமடைப் பகுதி களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பித் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், திங்கள்கிழமை அன்று கடைமடைப் பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால், காவிரி கிளை வாய்க்கால்கள் மற்றும் ஏரி, குளங் களை பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் விவ சாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதி நிதிகள், பொதுப்பணித்துறை அலு வலர்களுடன் ஆலோசனை நடத்தி னார். அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடைமடைப் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது பற்றி தொடர்ந்து அதிகாரிகளுடனும், விவசாயிகளுடன், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசிக் கொண்டுள் ளேன். கல்லணைக் கால்வாய் 4,500 கன அடி கொள்ளளவு கொண்டது.
மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் 2006 - 2011 ஆம் ஆண்டில் 200 கோடி ரூபாய் செலவில், கல்லணைக் கால்வாயை நவீனப்படுத்தும் பணி நடைபெற்றது. அதற்கு முன்னர் கல்லணை கால் வாயில் 2,700 கன அடி மட்டுமே தண்ணீர் எடுக்க முடிந்தது. நவீனப்படுத்தப்பட்ட பிறகு இன்று 3ஆயிரம் கன அடிக்கு கூடுதலாக எடுக்கப்படுகிறது.
2011க்கு பிறகு வந்த அரசு நவீனப்படு த்தப்படும் பணியை முழுமையாக செய்யாததால், கடந்த 8 ஆண்டுகளாக முழுமையாக தண்ணீர் எடுக்க முடியாத நிலைமை உள்ளது. வரும் ஆண்டி லாவது அந்த பணியை செய்தால் 4,200 கன அடி தண்ணீரை முழுமையாக எடுக்க முடியும். இப்போது ஆறு கொள்ளுகிற அளவிற்கு தண்ணீரை எடுத்து ஓரள விற்கு தேவையை, ஆட்சியர், பொதுப் பணித்துறை அதிகாரிகள், வரு வாய்த்துறை அதிகாரிகள் நிறைவு செய்து வருகின்றனர். வருகிற ஆண்டிலாவது மீதமுள்ள பணியை அரசு செய்யாவிட்டால், ‘கண் ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழும் செயலாகத்தான்’ இருக்கும். எனவே அரசு உடனடியாக கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும். தனியாக மாநில அரசோ, மத்திய அரசோ, நபார்டு வங்கி உதவியுடனோ பணிகளைத் தொடங்கிட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாகவும் கேட்டுக்கொள் கிறேன்.
மேலும் அக்டோபர் 15க்குள் இருக் கின்ற நீராதாரங்களை கொண்டு, தண்ணீர் வழங்கி குறையில்லாத வட்டாரமாக ஆக்குவதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர். இதனை விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி யினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே ஆறு, ஏரி குளங்கள் விரைவாக நிரம்பும். பொதுப்பணித்துறையின் முயற்சியை பாராட்டுகிறோம்.
ஒரு சொம்பு தண்ணீர் தேவையாக உள்ள இடத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் தான் கிடைக்கின்றது. சில இடங்களில் அதிகாரிகள் வரத்து வாய்க்கால்களை வெட்டாமல், தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்களை வெட்டியுள்ளனர். அத்தியாவசிய பணியை முடிக்கா மல் அனாவசிய பணியைசெய்து உள்ள தாக விவசாயிகள் கருதுகின்றனர். அக்டோபர் 15க்கு பிறகு நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுப்பதாக விவசாயிகள், விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது திமுக மாவட்டச் செய லாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி க.அன்பழகன், சேதுபாவாசத்திரம் தெற்கு ரவிச்சந்திரன், வடக்கு மு.கி முத்துமாணிக்கம், நகரச்செயலாளர் கோ.நீலகண்டன், விவசாய சங்க நிர்வாகிகள் (சிபிஎம்) வி.கருப்பையா, ஏ. வி.குமாரசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி, (சிபிஐ) பன்னீர்செல்வம், சித்திர வேலு, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஆர்.ஏ.முருகேசன், உதவி செயற்பொறியாளர் டி.அன்பரசன், உதவிப் பொறியாளர்கள் எஸ்.பிரசன்னா, எம்.ராஜமாணிக்கம், ஆர்.நாராயணசாமி, எஸ்.புஷ்பராணி, தென்னரசு மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர். (ந.நி.)