tamilnadu

img

சீமான் மீதான வழக்கிற்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை, மார்ச் 2- முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய சீமான்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக அரசையும், முதலமைச்சரையும் கடு மையாக விமர்சித்து பேசியதாக செய்தி வெளி யானது.  இது, முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாக கூறி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவ தூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி யும், சீமான், உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்  வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசா ரணைக்கு தடை விதிக்கவும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் மறுத்துவிட்டார்.