tamilnadu

img

கொரோனா பரவாமல் தடுத்திடுக!

தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

கொரோனா பரவாமல் தடுத்திடுக! ஊரடங்கால் கடும் நெருக்கடியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசர நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, ஏப்.11- கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், ஊரடங்கு உத்தரவின் விளை வாக பாதிப்புக்குள்ளாகி கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவா ரணங்களை வழங்கி பாதுகாத்திட அவசர நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடி தம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: 

தமிழகத்தில் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியா விலேயே அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்கு போவ தற்கான வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தமி ழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்ப தற்கும், ஊரடங்கு உத்தரவின் விளைவாக பாதிப்புக்குள்ளாகி கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி பாதுகாத்திட அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 

*    ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற நிலை யில் அடுத்த பதினைந்து நாட்கள் சாதாரண ஏழை எளிய மக்கள் உயிர் வாழ்வதற்கு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை, உணவுப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து குறைந்தபட்சம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் தலா ரூ.5000 தொகையும், குறைந்த பட்சம் ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிட வேண்டும். இவ்வாறு வழங்கப் படும் பொருட்கள் அனைத்தும் தரமான தாக இருப்பதை உறுதிப்படுத்த வேண் டும். அட்டை இல்லாதவர்கள், சர்க்கரை அட்டை உள்ளவர்கள், புலம் பெயர் தொழி லாளர்களுக்கும் இந்த நிவாரணம் கிடைக்க உரிய அரசாணை பிறப்பிக்கப் பட வேண்டும். 

*    ஏற்கனவே நியாய விலைக்கடையில் மளிகை பொருட்களின் தொகுப்பு 500 ரூபாய்க்கு வழங்குவதாக அறி விக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை யை ரூ.250 ஆக குறைத்து இதே அளவு பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கிட வேண்டும்.

*    அனைத்து நலவாரிய உறுப்பினர்களுக் கும் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மொத்த நலவாரிய உறுப்பினர்களுள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினருக்கே இது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து நலவாரி யங்களிலும் 31.3.2019 வரை பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண் ணிக்கை 72 லட்சத்து 97 ஆயிரத்து 446 ஆகும். இவர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள தலா ரூ.1000 மற்றும் உண வுப் பொருட்கள் கூடுதலாக வழங்கிட வேண்டும்.

*    தமிழகத்தில் ஒரு பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்றுள் ளது. சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தேர்தல் நடைபெற்ற உள்ளாட்சிகளுக்கும், நடை பெறாத உள்ளாட்சிகளுக்கும் கொரோனா பாதிப்பு வந்ததிலிருந்து நிதி ஏதும் வழங் கப்படவில்லை. தமிழகத்தின் பல ஊராட்சி களில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவு கிறது. மேலும் கொரோனா பாதிப்புக்கான சுகாதாரப் பணிகளையும் மேற்கொள்ள இயலவில்லை என உள்ளாட்சி பிரதிநிதி கள் தெரிவிக்கின்றனர். எனவே, உள் ளாட்சி அமைப்புகளுக்கு அவசரமாக நிதி யினை ஒதுக்கி தர வேண்டும். 

*    கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் பணியாற்றிய தொழிலாளர் களுக்கு மட்டும் இரண்டு நாள் கூடுதல் சட்டக்கூலி வழங்கப்படும் என அரசு அறி வித்துள்ளது. ஆனால் மார்ச் மாதத்தில் மிகச் சொற்ப அளவிலேயே பணிகள் நடந்துள்ளன. எனவே கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை அட்டை வழங்கப்பட்ட அனைத்து தொழிலாளர் களுக்கும் தலா 10 நாள் சட்டக்கூலியை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.

*    தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை மீறியதாக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர் களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு மேல் அந்த வாகனங்களை காவல்நிலையத்தில் நிறுத்தி வைப்பதன் மூலம் வாகனங்க ளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவை மீறி யவர்களை எச்சரித்து விடுவது என்கிற அடிப்படையில் அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழியினை பெற்றுக் கொண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்களது வாகனங்களையும் திருப்பி அளிக்க வேண்டும்.

*    ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது சில இடங்களில் காவல்துறையின் கடும் அத்துமீறல்கள் நடப்பதான செய்திகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமை மீறல்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

*    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு மருத்துவர்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு செய்வதாக அரசு கூறி யிருப்பதை போலவே, தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர் களுக்கும் அந்தந்த நிர்வாகம் காப்பீடு வழங்க முன்வருவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு மட்டு மல்லாமல் நோயாளிகளோடு நெருக்க மாக பணியாற்றும் ஊழியர்களுக்கும் காப்பீட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;