tamilnadu

img

அரசியல் மோசடி ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச்செயலாளர், திமுக

பொருளாதார சீரழிவு, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனையை திசைதிருப்ப குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அரசியல் மோசடி. மாணவர்கள், மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக வெடிக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகிலேயே அதிக இஸ்லாமி யர்கள் வாழும் இரண்டாவது நாடு இந்தியா. ஷேக்அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை இன்றைக்கும் சிறை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. தில்லியில் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க, பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து தாக்கியதோடு, போலீசே பேருந்தை கொளுத்துகிறது. பதவியேற்றது முதல் நாடாளுமன்ற அவைக்கே வராத அன்புமணி ராமதாஸ், சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களிக்க மட்டுமே வந்தார். அதிமுக, பாமகவும் எதிராக வாக்களித்திருந்தால் அந்த சட்டத்திருத்தம் தோற்கடிக்கப்பட்டு இருக்கும். நாட்டில் அயோக்கியத்தனமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து மக்களை காப்பாற்ற ஒன்றுபட்டு போராடுவோம்.

;