என்டிசி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு
கோவை, ஜூன் 17- மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பஞ்சாலைகளை இயக்க உடனடி யாக உத்தரவிட வேண்டும் என்பதை வலியு றுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க கூட் டமைப்பு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசிற்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகளில் தமிழகத்தில் ஏழு ஆலைகள் இயங்கி வருகின்றது. இதில், கோவையில் மட்டும் ஐந்து பஞ்சாலைகள் இயங்கும் நிலையில், அதில் பலநூறு தொழிலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலை யில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆலைகள் இயக்கப் படவில்லை. இதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் என்டிசி நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் மற்றும் என்டிசி நிர்வாகிகள், தொழிற் சங்க தலைவர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊதியத்தை வழங்குவது என்றும் ஆலையை இயக்குவது குறித்து மத்திய ஜவுளித்துறைக்கு தெரியப் படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல் படுத்துவதுடன் ஜூன் 15ஆம் தேதியை கடந்தும் மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப் படவில்லை.
இதனையடுத்து செவ்வாயன்று பஞ் சாலை தொழிலாளர்கள் அனைத்து என்டிசி ஆலைகளிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து புதனன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அனைத்து தொழிற்சங்க நிர் வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்றது. இதில், என்டிசி நிர்வா கத்தை சந்தித்து பேசுவது என முடிவு செய்து கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்நடராஜன் மற்றும் பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒத்துக்கொண்ட முடிவை நடைமுறைப்படுத்தாமல் என்டிசி நிர்வாகம் தொடர்ந்து பிடிவாத போக்குடன் செயல் பட்டதால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவது என்றும். இதன் தொடர்ச்சியாக உடன்பாடு எட்டப்படும் வரை யில் காட்டூரில் உள்ள என்டிசி தலைமையக வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ள தாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்த னர்.
ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங் கள் ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது என பிரதமர் அறிவுறுத்திய நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் களுக்கே ஊதியம் தராமல் தொழிலாளர் களை அலைகழிப்பது பேச்சு ஒன்று செயல் வேறு என பிரதமர் செயல்படுவதாக தொழிலா ளர்கள் குற்றம்சாட்டினர். முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனுடன் தொழிற்சங்க தலைவர்கள் எல்பிஎப் பார்த்தசாரதி, ஐஎன்டியுசி சீனி வாசன், சிஐடியு சங்க தலைவர் சேவியர், ஏடிபி கோபால், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் சங்க தலைவர் டி.எஸ்.ராஜாமணி எம்எல்எப் தியாகராஜன், என்டிஎல்எப் ரங்க சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.