கொடுமணல் அகழாய்வில் கல்வெட்டுகள், எழுத்துக்கள் பெரும்பாலானவை தமிழ் சார்ந்தவை ஆனால் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் ஏன் அதிகளவில் பணியில் உள்ளனர்? - என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நெல்லை காமராஜ், புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் தொல்லியல்துறை அகழாய்வுப் பணிகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் ஆ, ஈ போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட அதிக கல்வெட்டுகள், எழுத்துக்கள் தமிழில் இருக்கும்போது சமஸ்கிருதம் அறிந்தவர்கள் அதிகளவில் பணி அமர்த்தப்படுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய அடுத்த 10 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுட்டுள்ளனர்.
அகழாய்வுப் பொருள்களை அனுப்பவும், சோதனை செய்யவும் தமிழக அரசு உடனடியாக தொகையை வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.