tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக 40 குடும்பத்தினர் இணைந்தனர்

குடவாசல்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சிறுபுலியூர் பகுதியைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் புதிதாக இணைந்தனர்.

நன்னிலம் ஒன்றியம் சிறுபுலியூர், வல்லங்கிளி, பனங்காட்டான்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஜி.வினோத் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். அனைவரையும் கட்சியில் இணைத்துக் கொண்டு செங்கொடியை ஏற்றி வைத்து மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உரையாற்றினார்.நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். 4-வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெ.முகமது உதுமான் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் தியாகு ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.எம்.லிங்கம், டி.ராஜா, பி.ஸ்டாலின், வரத.வசந்தராஜன், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் வசந்தபாலன், சரவண சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;