tamilnadu

img

உள்ளாட்சி தலைவர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலைக்கு சிபிஐ கண்டனம்

சென்னை, ஜன.11- நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய ஊராட்சிக்குழு தலைவர்கள் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல் ஜன.11 அன்று நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் மறை முக தேர்தலுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வந்த போதே ஆளும் கட்சி அஇஅதிமுக அரசு அதிகா ரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது  அழுத்தம் கொடுத்துத் தேர்தல் முடிவுகளை தனக்குச் சாதகமாக அறிவித்துக் கொள்ளும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்ச ரித்திருந்தது. சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்பார்த்தது போலவே திமுக வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பெற்ற ஒன்றியங்க ளில் தலைவருக்கான தேர்தல்கள்  மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட ஊராட்சி  தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு ஒன்றியத்தில் மொத்த முள்ள 13 வார்டுகளில் 7 வார்டு உறுப்பினர்களின் வாக்குகள் திமுக கூட்டணி வேட்பாளர் பெற்றி ருந்தார். அதனைத் திரும்ப, திரும்ப  எண்ண வைத்து, இறுதியில் அஇ அதிமுகவினர் தேர்தல் மையத்தில்  அத்துமீறி நுழைந்து கலகம் செய்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவல ருக்கு ‘திடீர் உடல்நலக் குறைவு  ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை மாநில தேர்தல் ஆணை யம் சிந்திக்க மறந்ததால்  பல  இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், வெற்றி பெறும் வாய்ப்புள்ள இடங்களில் ‘சட்டம்-ஒழுங்கை’ ஆளும் கட்சியினரே சீர்குலைத்து, தேர்தலை நடத்த மறுத்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். அஇஅதிமுகவின் அதிகார அத்து மீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

;