வேலூர், நவ. 7- வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை அருகே 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப் பட்டவரை மீட்டுள்ள காவல்துறையினர் இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். அத்தனாவூரைச் சேர்ந்தவர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நடைபயிற்சிக்கு சென்றவர் வீடுதிரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலை யில் காலை 9 மணிக்கு தனது மகன் ராபீன் செல்போன் நம்பருக்கு அழைத்த அருள், தன்னை யாரோ கடத்தி வைத்தி ருப்பதாகவும் ரூ. 10 லட்சம் கொடுத்து தன்னை மீட்டுச் செல்லுமாறும் தெரி வித்துள்ளார். சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து ராபீனுக்கு போன் செய்த மர்மநபர், ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தால் தான் அருளை விடுவோம் என்று மிரட்டிய தாகக் கூறப்படுகிறது. இது குறித்து அரு ளின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சைபர் கிரைம் உதவியுடன் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த செல் போன் நம்பர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ளது தெரியவந்தது. இதனி டைய ராபீனை தொடர்புகொண்ட கடத்தல் காரர்கள், பணத்தை குப்பம் மற்றும் கர்நாடக மாநில எல்லையான பங்காருப் பேட்டை இடையில் உள்ள வனத்தில் வந்து கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடத்தல் காரர்கள் சொன்ன இடத்துக்கு பணத்தை கொடுப்பது போன்று சாதாரண உடையில் சென்ற ஜோலார் பேட்டை காவலர், கடத்தல்காரர் களை சுற்றி வளைத்து அருளை மீட்டதாகக் கூறப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத் திய காரை பறிமுதல் செய்த காவலர், 4 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.