tamilnadu

img

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுக்கோடு ஊராட்சிமன்றத் தலைவர் பதவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுக்கோடு ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை தொடர்ந்து 50 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகித்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக திங்களன்று பொறுப்பேற்ற சி.மரியசெல்வி விலாசினி, கட்சியின் மூத்த தோழரும் கூட்டுறவு சங்க தலைவருமான நடராஜனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சசிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;