சென்னை,டிச.19- தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வெப்பச்சலனம் காரண மாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழையும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக வேதாரண்யத்தில் 3 செ. மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித் துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங் களில் அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.