tamilnadu

img

மர்மான முறையில் இறந்த தலித் இளம்பெண் குடும்பத்திற்கு கே. பாலகிருஷ்ணன் ஆறுதல்

காஞ்சிபுரம், டிச.5- கடந்த வாரம்  ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத் தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்த தலித் குடும்பத்தை சேர்ந்த  ரோஜா என்ற பெண்ணின் குடும்பத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

கடந்த மாதம்  28ஆம் தேதி  காஞ்சிபுரம் அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா (19)என்ற தலித் இளம்பெண் மர்மமான முறையில் தனியார் தோட்டத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கும்பல் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து ள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  விடுதலை சிறுத்தைகள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல் போன்ற பல்வேறு போராட்ட ங்களில் ஈடுபட்டனர் . அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பாலியல் வன்முறைக்கு எதிரான நடைபய ணத்தின் போது இக்கொலை சம்பவத்து க்கு கடும் கண்டனம் தெரிவித்து நடை பயணக் குழுவினர் பிரச்சாரம் செய்தனர். 

இந்நிலையில் வியாழனன்று  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், எழுத் தாளர் செம்மலர், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாசறை செல்வராஜ் ஆகியோர், ரோஜாவின் பெற்றோரை அவரது இல் லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர்.   

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைச் செயலாளர் ப.சு. பாரதி அண்ணா, மாவட்டச் செயலாளர் கே. வாசுதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலா ளர் இ.முத்துக்குமார், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் கே.ஜீவா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். சௌந்தரி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் வசந்தா, சிபிஎம் காஞ்சி நகர செயலாளர் சங்கர் வட்டச் செயலாளர் இ.லாரன்ஸ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.வாசு தேவன், எம்.ஆறுமுகம்  உட்பட பலர் அப்போது உடனிருந்தனர்.

முறைப்படி விசாரணை நடத்துக!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், ரோஜாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கைது செய்ய வேண்டும். காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் ரோஜா தற்கொலையை தடுத்திருக்க லாம். உயிரிழந்த ரோஜாவின் குடும் பத்திற்கு 25 லட்சம் ரூபாய்  நிவாரண நிதி அளிக்கவேண்டும். தமிழகத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்துகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.