தூத்துக்குடி பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வில் நகரங்களை விட கிராமங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
உலகையே தற்போது கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது. இதனால் 21 நாட்கள் மொத்த இந்தியாவிற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை தடுக்கும் வகையில் அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இளைஞர்கள் 30பேர் குழுவாக சேர்ந்து தங்களுக்குள்ளே கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில்அழகாபுரி ஊருக்கு செல்ல 3 பாதைகள் உள்ளன. அதில் 2 பாதைகளின் எல்லைகளை தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர்.
ஒரு எல்லையை மட்டும் திறந்துவைத்துள்ளனர். அங்கு கை கழுவதற்கு சோப்பு, தண்ணீர் வசதியும் செய்துள்ளனர்.ஷிப்டு முறைகளாக 3 பேர் வீதம் மாறி மாறி எல்லையில் காவல் காத்து வருகிறார்கள். ஊரில் இருந்து வெளியே செல்பவர்களை விசாரித்து அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி அனுமதிக்கின்றனர். அன்னிய நபர்கள் யாரேனும் ஊருக்குள் வருவதாக இருந்தால் விசாரிக்கின்றனர்.
முக்கியமான பிரச்சனையாக இருந்தால், அவர்களுக்கு சோப்பு, தண்ணீர் கொடுத்து கைகளை கழுவ வைத்து உள்ளே அனுமதிக்கின்றனர்.மேலும் தங்கள் ஊரில் இருந்து வெளியே சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருவோரையும் கைகளை சோப்பு போட்டு கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர்: இளைஞர்களின் இந்த செயலை அந்த பகுதி பொது மக்கள் பாராட்டி உள்ளனர் அருகில் உள்ள பிற கிராமங்களிலும் இதனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா விழிப்புணர்வில் நகரங்களை விட கிராமங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.