tamilnadu

img

மதுரையில் ஒருவருக்கு பாதிப்பு

மதுரை, மார்ச் 24- மதுரை அண்ணாநகர் நெல்லை  வீதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்த தாரரும், பயான் மற்றும் மதச் சொற்பொழிவாளருமான 54 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பாதிக்கப் பட்டவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகனுக்கு திருமணமாகிவிட்டது. திரு மணமானவருக்கு ஐந்து வயது ஆண் குழந்தை உள்ளது. கொரானோ பாதிக்கப்பட்டவருடன் உடன் பிறந்த வர்கள் மொத்தம் ஆறு பேர். இவர் களில் ஒருவர் திமுகவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் ஆவார். மதுரையில் சிகிச்சை பெற்றும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.