சென்னை, ஏப்.11- சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் எனப்படும் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலக வளாகம் உள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட, பல மருத்துவத் துறை சார்ந்த அலுவலகங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன.
108 ஆம்புலன்ஸ், பொதுச் சுகா தாரத்துறை, காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம் உட்பட பல்வேறு அலுவங்களும் இதே வளாகத்தில் அமைந்துள்ளன. கொரோனா தொடர் பாக தினமும் சுகாதாரத்துறை செயலா ளர் பீலா ராஜேஷ் இங்குதான் தினசரி செய்தியாளர்கள் சந்திப்பு மேற்கொள் வது வழக்கம். தலைமைச் செயலர் கூட செய் தியாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதி காரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், இங்கு ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் எழுத்த ராக பணிபுரியும் 45 வயது ஊழியர் ஒரு வருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவ ருக்கு எந்த வழியில் தொற்று ஏற்பட்டி ருக்கும்? என்பது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.