ஐ.நா.சபை பொதுச் செயலாளர்
ஜெனீவா: கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளின் தலைவர்களி டையே ஒத்துழைப்பு இல்லையென ஐ.நா.சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று பரவத் தொடங்கி யதிலிருந்து இரண்டாம் உலக போருக்குப் பின் உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என கூறிய குட்டரெஸ், சர்வதேச நாடு களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடு பட்டார். மார்ச் 23-ஆம் தேதி அனைத்து பிரச்ச னைகளையும் மறந்து கொரோனாவை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.
தற்போது உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 லட்சத்து 53 ஆயிரத்து 738 ஆக அதிக ரித்துள்ளது. 4.79 லட்சம் பேர் உயிரிழந்துள்ள னர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம டைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஏ.எப்.பி நிறுவனத்துக்கு ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் அளித்துள்ள பேட்டியில் கூறிய தாவது:
கொரோனா தொற்றை கையாள்வதில் சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பு இல்லை. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தனித்தனியான கொள்கைகளை மேற்கொள் கின்றன. இதனால் தொற்றை தோற்கடிக்க முடியாது. தனித்துச் செயல்படுவதன் மூலம் அவர்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். சீனாவில் தொடங்கி, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கும் தொற்று பரவியது. சிலர் இப்போது இரண்டாவது அலை எப்போது வரும் என்பது குறித்து பேசுகி றார்கள். ஆனால் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் நாடுகளிடையே ஒருங்கி ணைப்பு இல்லை.
கொரோனா பரவலால் வேலை இழப்பு, வன்முறை, மனித உரிமைகள் மீறல் ஆகியவை அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசி யல், பொருளாதார, சமூக நிகழ்வுகள், அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை ஒருங்கி ணைப்பது தான் தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க உதவும். கொரோனா தடுப்பூசி என்பது, மக்க ளின் தடுப்பூசியாக இருக்க வேண்டும். ஆனால் நாடுகளிடையே வணிக ரீதியான தகராறில் பணக்காரர்களை உருவாக்கும் தடுப்பூசியாக இருக்கக் கூடாது. இந்தச் சூழ லில் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாததால் விரக்தியடைகிறேன்.எதிர்காலத்தில் புதிய தலைமுறையினர் இதுபோன்ற விஷயங்க ளை மாற்ற முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.