tamilnadu

img

கொரோனா தொற்று.. இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்க..

6 மாதத்திற்கு பின் சொல்லும் உலக சுகாதார அமைப்பு  

ஜெனிவா: கோவிட் -19 உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், இளைஞர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும் என்று கூறியதுடன், மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களை வலியுறுத்தியது.  

கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் சுமார் 1.7 கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளில் இளைஞர்கள் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுபற்றி கூறுகையில், தொற்று சில நாடுகளில் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இளைஞர்களும் தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும். அவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இளைஞர்கள் எடுக்க வேண்டும் என்றார்