சென்னை, ஏப்.12- எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்குப் பதிலளித்து முதலமைச்சர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கேரளத்தில் முதல் கொரோனா தொற்று வந்தபோதே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உள்ளது என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை கள், புள்ளி விவரங்களை வலைத் தளத்தில் ஒளிவு மறை வின்றி வெளியிட்டு வருவதாகவும் தெரி வித்துள்ளார்.
மாநில எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்தது, விமான நிலையங்களில் பயணி களைச் சோதனைக்குட்படுத்திக் கண்காணிப்பில் வைத்தது என அரசு எடுத்த நடவடிக்கைகளைச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலை வரே பாராட்டியதைக் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் நோய்த்தொற்று உள்ளதை அறிந்த உடனேயே ஜனவரி மாதத்திலேயே பரிசோதனைக் கருவிகள், முழு உடல்கவச உடைகள், மருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவுகள் வழங்கியதாக வும் புதிதாக 530 மருத்துவர்கள், ஆயிரம் செவிலி யர்கள், ஆயிரத்து 558 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பித்து பட்டுள்ளதாகவும் தெரிவித்தி ருக்கிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி யது வருத்தமளிப்ப தாகவும் முதலமைச்சர் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.