சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 100ஐ தாண்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 109 பேர் இறந்துள்ளனர். இதில் 86 மரணங்கள் அரசு மருத்துவமனையிலும், 23 தனியார் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது.
மாவட்டங்கள் வாரியாக தமிழகத்தில் உயிரிழப்பு விவரம்:
சென்னை- 20
விருதுநகர்- 9
கோவை - 7
ராணிப்பேட்டை- 4
புதுக்கோட்டை - 4
செங்கல்பட்டு-4
மதுரை - 4
தூத்துக்குடி- 4
திருவள்ளூர்- 4
திருவண்ணாமலை - 4
காஞ்சிபுரம்- 5
தேனி- 5
தென்காசி- 5
சிவகங்கை- 5
நெல்லை- 5
குமரி - 3
சேலம்- 3
பெரம்பலூர்-2
ராமநாதபுரம் 2
தஞ்சாவூர் 2
திண்டுக்கல் -1
ஈரோடு -1
நாகப்பட்டினம் -1
திருப்பத்தூர் -1
வேலூர் -1
விழுப்புரம் -1