tamilnadu

img

பெண் ஊழியருக்குக் கொரோனா குன்னூர் நகராட்சி மார்க்கெட் மூடல்

உதகை, ஜூலை 25- குன்னூரில் நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நகராட்சி மார்க் கெட் மற்றும் நகராட்சி அலுவலகம் மூடப் பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலை யில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் நகராட்சியில் பணி புரியும் பெண் ஊழியருக்கு வெள்ளியன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்  நகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகு தியில் உள்ள வியாபாரிகளுடன் தொடர் புடைய நபர் ஆவார். இதனால் குன்னூர் நக ராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் உடனடி யாக மூடப்பட்டது.  கொரோனா நோய்த்தொற்று காரண மாக தினசரி மார்க்கெட் திடீரென மூடப்பட்ட தால் பொருட்கள் வாங்க வந்திருந்த பொது மக்கள் அங்கிருந்து அவசர அவசரமாக ஓட்டம் பிடித்தனர். அதேபோல் வியாபாரிக ளும் தங்களது கடைகளை வேகமாக அடைத் தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. பின்னர் கடையில் இருந்த வியாபாரிகள் மற்றும் நகராட்சி ஊழி யர்களுக்கு தொற்றுப் பரிசோதனை மாதிரி கள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வரு கிறது.