tamilnadu

img

சாதி மறுப்பாளர்கள் சங்கமம்- கௌரவிப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஆக.17-  தஞ்சாவூரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை சாதி மறுப்பாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு த.தீ.ஒ முன்னணி துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் என்.சிவகுரு வரவேற்றார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசி னர்.  தொடர்ந்து தீண்டாமைக்கு எதிரான போரில் களத்தில் நின்றவர்கள், சாதி ஆணவப் படு கொலையில் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள், படைப்பாளிகள், மனித உரிமை செயற்பாட்டா ளர்கள், சாதி ஒழிப்பு போராளிகள் ஆகி யோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.  நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கின் சகோதரர் சதீஷ், நந்திஸின் சகோதரர் சங்கர், அவினாசி சத்துணவு பணியா ளர் பாப்பம்மாள், அரியலூர் நந்தினியின் சகோ தரி சிவரஞ்சனி, நீட் தேர்வால் பலியான அனிதா வின் தந்தை கந்தசாமி, ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் பங்கேற்ற கே.அபிமன்னன் உள்ளிட்ட பல தோழர்களுக்கு நினைவுப் பரிசு கள் வழங்கப்பட்டன.  கேரள முன்னாள் சபாநாயகர் ஆர்.ராதா கிருஷ்ணன், தீஒமு மாநிலத் தலைவர் பி. சம்பத், மாநில பொதுச்செயலாளர் கே.சாமு வேல் ராஜ் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

தியாகி இமானுவேல் பேரவை-புலி பாண்டி, சசி அமைப்பு- பாண்டியன், ரீய்டு அமைப்பு- ஆர். கருப்புசாமி, தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் அமைப்பு-கேப்டன் துரை, சோக்கோ அறக்கட்டளை- வழக்கறிஞர் எஸ்.செல்வ கோமதி, அம்பேத்கர் பேரவை-சைதை அன்பு தாசன், அம்பேத்கர் மக்கள் மேடை-மதி பறை யனார், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை-கோ.நீலமேகம், டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தருமபுரி சி.ராஜசேகரன், மக்கள் உரிமைக் கட்சி டி.துரைராஜ், டி.ஜி.சம்பத்-பண்ணியாண்டிகள் சங்கம், புதுச்சேரி அம்பேத்கர் மக்கள் சங்கம்-சுப்பிரமணியன், புதுச்சேரி பீம்சேனா-சுமதி, அம்பேத்கர் மக்கள் பேரவை-எஸ்.திருமால், புதுச்சேரி மாநில அருந்ததியர் மக்கள் நலச்சங்கம்- எம்.தவமணி, வனவேங்கைகள் கட்சி- பொ.மு.இரணியன், புதிரை வண்ணார் பேரவை-ச.செல்லக்கண்ணு, நவபோதி பண்பாட்டு மையம் வெ.முருகன், தலித் கிறிஸ்தவர் மக்கள் கூட்டமைப்பு-வழக்கறிஞர் சி.ஜஸ்டின், கும்பகோணம்- பேரா.சி.அரங்க சுப்பையா, நீலப்புலிகள் இயக்கம்- வழக்கறிஞர் அ.இளங்கோவன், ஆதித்தமிழர் மக்கள் இயக்கம் சுபா தங்க பாண்டியன், மக்கள் புரட்சிக் கழகம் மா.வர்கீஸ், நிலவுரிமைக் கூட்டமைப்பு-ருக்மாந்தன், ஆதி திராவிட மகாஜன சங்கம்- எஸ்.கே.அந்தோணி, சிவகங்கை ஈசனூர் பூ.செருவலிங்கம், தஞ்சாவூர் வழக்கறிஞர் அ.பன்னீர் செல்வம், எழுத்தாளர் தஞ்சை பசு.கௌதமன், ஆதித்தமி ழர் பாதுகாப்பு பேரவை வழக்கறிஞர் தவா.கணே சன், மானுடம் இதழாளர்-செங்கதிர், அருட்தந்தை ஜான்சுரேஷ் உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக தஞ்சை மாநகரத் தலைவர் ப.சத்தியநாதன் நன்றி கூறினார்.