பாஜக அரசு மீது சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்
திருப்பூர், நவ. 18 – நவீன இந்தியா என்ற கட்ட மைப்பை அழிப்பதற்காக, கம்பீர மான இந்திய நாடாளுமன்றக் கட்டி டத்தையே மாற்ற பாஜக அரசு முயற்சித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை நாடாளு மன்ற உறுப்பினருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறினார். ஞாயிறன்று திருப்பூரில் செந்தொண்டர் பேரணியின் நிறை வாக யுனிவர்சல் திரையரங்கம் அரு கில் மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ராஜ கோபால் தலைமை ஏற்றார். வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனி சாமி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இக்கூட்டத்தை முடித்துவிட்டு நான் நாடாளுமன்றத்துக்கு போவதைப் பற்றி உற்சாகமாகக் குறிப்பிட்டனர். யாராவது திகில் படத்தைப் பார்க்க மகிழ்ச்சியுடன் போவார்களா, அதுபோல்தான் இன்றைய நிலை உள்ளது. நாடாளு மன்றத்துக்குச் செல்வதற்கு முன் பாக திருப்பூருக்கு வந்து இங்கு நடை பெற்ற ஆயிரக்கணக்கான செந்தொண் டர்களின் அணிவகுப்புப் பேரணி யைப் பார்த்து உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் அங்கே செல் என்று என்னை வரவழைத்துள்ளனர்.
கம்யூனிச தியாக வரலாறு
திருப்பூர் மாவட்ட செங்கொடி இயக்கத்தின் தியாக வரலாற்றைச் சொல்லி தியாகிகளை கௌரவித் தனர். ஒரு மாவட்டத்திலேயே ஏராள மான தியாகிகளைப் பெற்றுள்ளது செங்கொடி இயக்கம். ஆனால் நாடு முழுவதுக்கும், இப்படி ஒரே யொரு தியாகியையாவது அவர் களது முன்னோர்கள் என்று ஆளும் பாஜகவால் சொல்ல முடியுமா? வீரசாவர்க்கரைச் சொல்வார்கள், ஆனால் அவர் சுதந்திரப் போராட்டத் தைக் காட்டிக் கொடுத்து, மன்னிப்புக் கேட்டு எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர். ஆனால் எங்கள் தியாகி கள் உயிரே போனாலும் நாட்டு விடு தலைதான் முக்கியம் என கொடும் அடக்குமுறையை ஏற்றவர்கள். கொடிய அந்தமான் சிறைச்சாலை யில் அடைக்கப்பட்ட 10 ஆயிரம் பேரில் 8 ஆயிரம் பேர் கம்யூனிச சிந்த னையால் ஈர்க்கப்பட்டு இயக்கத் தின் உள்ளும், வெளியிலும் செயல் பட்டவர்கள். நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு காற்றின் மாசு கூட அண்டாத தூய் மையான வரலாறாகும். ஆனால் பாஜகவுக்கு அத்தகைய வரலாறு இல்லாததால்தான் மற்றவர்களின் வரலாற்றிலிருந்து சர்தார் வல்லபாய் பட்டேலை அபகரித்துக் கொண்டனர். மக்களுக்காகப் பாடு பட்டு ஊணை, உயிரை உருக்கிக் கட்டி வளர்க்கப்பட்டது கம்யூ னிஸ்ட் இயக்கம்.
தீவிரமடையும் பொருளாதார மந்தம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. பொருளாதார மந்தநிலை இருக் ககிறது என்பதையே ஏற்காதவர் ளாக ஆட்சியாளர்கள் இருக்கின்ற னர். இப்போது பொருளாதார மந்தத் தைப் போக்க பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்கப் போவதாகச் சொல்கின்றனர். நாடு என்பதைத் தவிர எல்லாவற்றையும் விற்கப் பார்க் கிறார்கள். பொருளாதார மந்தம் இல்லை என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும், பெரும் நிறுவனங்கள் வெளியிடும் வரவு செலவு, காலாண்டு அறிக்கை கள் பக்கம் பக்கமாக ஊடகங்களில் வெளி வருகின்றன. அனைத்தும், 25 முதல் 30 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்திருப்பதைக் காட்டுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் வீழ்ச்சிக் கணக்கைக் காட்டிக் கொண்டிருக்கும் போது இரண்டே இரண்டு நிறு வனங்கள் மட்டும் 25 சதவிகிதம் வளர்ச்சிக் கணக்கைக் காட்டி இருக்கின்றன. அதில் ஒன்று முத்தூட் வங்கி; மற்றொன்று மலபார் வங்கி. இரண்டும் அடகுக் கடன் தரும் நிறு வனங்கள். இதற்கு என்ன அர்த்தம்? தொழில், வியாபாரம் செய்ய முடியா மல் அடகு வைப்பவர்கள் எண் ணிக்கை அதிகரித்திருக்கிறது என்ப தால்தான் இந்த நிலை. ரயில்வே துறையில் ஒன்றரை மாதத்தில் லாபகரமான 100 ரயில் களைத் தனியாருக்கு விற்கப் போகி றார்கள். பெரிய விமான நிலையங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப் பட்டுவிட்டன.
மிக மோசமான நிலையில் தொழில் நகரங்களான கோவையும், திருப்பூரும் உள்ளன. இந்தியாவின் மொத்த நூற்பாலைகளில் 70 சதவிகி தம் தமிழகத்தின் பங்கு. இதில் கோவை, திருப்பூரின் பங்கு மட்டும் 45 சதவிகிதம். ஆனால் இந்த தொழில் நலிவைச் சந்திக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் வங்க தேசத்தில் இருந்து துணி வரத்து 400 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த விசயத்தில் மோடிக்கு தேசபக்தி வரவில்லை! அம்பானி, அதானி வாழ்ந்தால் போதும், சிறு குறு நடுத்தர தொழில் செய்வோர் வீழ்வதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ரிசர்வ் வங்கியில் எடுத்த ரூ.1.70 லட்சம் கோடி யில் ரூ.1.30 லட்சத்தை கார்ப்பரேட் நிறு வனங்களுக்குத் தாரை வார்க்கப் போவதாக சொல்லும் பாஜக அரசு, வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு தொழில் துறையினருக்கு வெறும் ரூ.316 கோடி தருவதாகக் கூறியுள்ளனர்.
நாடாளுமன்றக் கட்டடம்
இப்போது நாடாளுமன்றக் கட்டடத்தை மாற்றப் போகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தை விட இங்கிலாந்து, அமெரிக்க நாடாளு மன்றங்கள் சிறியவை. அங்கு இட நெருக்கடி இருந்தாலும் அதை மாற்ற மாட்டோம், அவை ஜனநாயகத்தின் அடையாளங்களாக உள்ளன என அங்குள்ள அரசுகள் செயல்படு கின்றன. ஆனால் போதுமான இட வசதியுடன், மிக அழகான கலை நயத்துடன் அமைந்துள்ள இந்திய நாடாளுமன்றத்தை மாற்றப் போகி றார்கள். அதற்குக் காரணம் என்ன? இந்திய அரசியல் சாசனத்தை விதைத்த இடம் அது! மகத்தான தலைவர்கள் நடமாடிய இடம் அது. ஜவஹர்லால் நேரு, அம்பேத்கார் மற்றும் கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பலர் விவாதித்து ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தி வளர்த்த இடம் இந்த நாடாளுமன்றக் கட்டடம். இவ்வளவு கம்பீரமான கட்டிடம் வேறெங்கும் இல்லை. பாசி சத்தின் முதல் வேலை உண்மை யான வரலாற்றை அழிப்பதற்கு முன் பாக வரலாற்று சாட்சிகளை அழிப் பதுதான்! நமது நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல, அது நவீன இந்தியா என்ற சிந்தனை உதயமான இடம். மாநிலங்களின் ஒன்றியமான இந்தியா, மொழிவழி மாநிலங்களாக கூட்டாட்சியுடன் செயல்படும் இந்தியா இருக்கக் கூடாது; அது இருப்பது அவர்கள் கட்ட நினைக்கும் மதவாத சிந்தனைக்கு பிரச்சனையாக உள்ளது. எனவேதான் நவீன இந் தியா என்ற சிந்தனையை அழிக்க, அந்த சிந்தனை உருவான இடத்தை மாற்ற நினைக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றம் என்ற கட்டிடத்தை அல்ல, நவீன இந்தியா என்ற கட்டு மானத்தை அழிக்க நினைக்கின்றனர்.
பன்மைத்தன்மைக்கு ஆபத்து
நாடாளுமன்ற கட்டிடத்தை மாற்று வது, பொருளாதாரத்தை நசுக்குவது, புதிய கல்விக் கொள்கையைத் திணிப்பது, மாநில உரிமைகளைப் பறிப்பது, சமஸ்கிருதம், இந்தி மொழிகளைத் திணிப்பது என பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய ஒற்றுமை என்பது அதன் ஒருமைப்பாட்டில் இருக்கிறது. ஏராளமான மொழிகள், எண்ணற்ற கலாச்சாரங்கள், பல்வேறு உணவுப் பழக்கங்கள் என்ற பன்மைத்து வம்தான் இந்தியா. அந்த பன் மைத்தன்மையை அழிக்கத்தான் கல்வியை அழிக்கப் பார்க்கின்றனர்.
கம்யூனிஸ்டுகளே உயிர் ஆற்றல்
அவர்கள் விரும்பும் வரலாற்றைக் கட்டமைக்க, இருக்கும் வரலாற்றை அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டி ருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக போராடக்கூடியவர்கள் கம்யூனிஸ்டுகள். வலதுசாரிகள் மிகப்பெரிய கோழைகள், ஆனால் காலத்தைப் பார்த்தும் அஞ்சாமல் போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள். 70 ஆண்டு காலம் நம் முன்னோர்கள் சிந்தனையில் கட்டி எழுப்பிய இந்தியாவுக்கு எதிரான ஆபத்தான கருத்தியல் கூட்டமாக ஆர்எஸ்எஸ், பாஜக இருக்கிறது. எனவேதான் அனைத்து ஜனநாயக சிந்தனை கொண்டவர்களுடனும் இணைந்து நிற்கிறோம். கம்யூனிஸ்டுகளின் உயிராற்றல் அதிகாரத்தில் இல்லை. பசித்த மனிதர்களின் வயிற்று இரைச்சல் இருக்கும் வரை, மனித நேயம் இருக்கும் வரை கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள். அவர்களது உயி ராற்றல் மனிதகுல மீட்சிக்கான போராட்டத்தில், மனித கனவுக்கு வடிவம் கொடுப்பதில் அடங்கி இருக்கிறது. இவ்வாறு சு.வெங்கடேசன் கூறினார்.
நிறைவாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல் பேசினார். அவர் கடந்த கால அனுபவத்தை உள்வாங்கி இன்றைய பாஜக அரசியலை முறியடிக்கப் பாடு படுவோம் என்றார். முன்னதாக இந்த கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் சம்சீர் அகமது, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் திருப் பூர் மாவட்டத்தின் தியாக வர லாற்றைச் சுட்டிக்காட்டி பேசினார். இதையடுத்து தியாகிகள் குடும்பத்தி னர் மேடைக்கு வரவழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டனர். முன்னதாக மேடையில், உடு மலை துரையரசன், திருப்பூர் கிருஷ் ணன் குழுவினரின் பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து திருப்பூர் கலைக்குழு சார்பில் ‘சவக்குழி’ என்ற தலைப்பில் நாட கம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்ட இந்த பொதுக் கூட்டத்தின் நிறைவில் கட்சி யின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் நன்றி கூறினார்.