tamilnadu

img

கீழடி அகழாய்வுக்கு மேலும் ரூ.20 கோடி தேவை: அமைச்சர்

சென்னை,செப்.20- இந்தி எதிர்ப்பு போராட்டம் போல தமிழ் காப்பு போராட்டம் நடத்த இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 18 ஆவது தமிழ் இணைய மாநாட்டின் துவக்க விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பாண்டியராஜன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், இணைய உலகில் 80 சதவீத தகவல் தொடர்பு செல்போன் மற்றும் இணையம் வழியாக நடைபெறுவதாகவும் அதில் 50 சதவீதம் ஆங்கிலத்திலும் 0 புள்ளி 01 சதவீதம் மட்டுமே தமிழில் நடப்பதாகவும் தெரிவித்தார். இணைய தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்தினால்தான் தமிழ்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்று அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார். சொற்குவை என்கிற இணையதளம் மூலம் புதிய தமிழ் வார்த்தை உருவாக்கலாம் எனவும், தெரிவித்த அமைச்சர், மாணவர்கள் மத்தியில் புதிய வார்த்தைக உருவாக்க மாநாடு நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பாண்டியராஜன், கீழடி அகழாய்வுளை தொடர்பாக வரும் செப்.23 அன்று மத்திய கலாச்சார அமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் 20 கோடி ரூபாய் செலவு செய்தால் கீழடி அகழாய்வை பெரிய அளவில் முன்னெடுத்து செல்ல முடியும் என்றும் கூறினார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இசைக்கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.