tamilnadu

img

தமிழகத்தில் குழந்தைகள் மீதான வன்கொடுமை 250 சதவிகிதம் அதிகரிப்பு

நாகர்கோவில், மார்ச்.8- தமிழகத்தில் குழந்தைகள் மீதான வன் கொடுமை 250 சதவீதம் அதிகரித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு குற்றம்சாட்டினார். தமிழகத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை தங்கு தடையின்றி நடக்கிறது. சமீப காலமாக குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கள் ஏராளம் நடக்கிறது. தமிழகத்தில் குழந்தை கள் மீதான வன்கொடுமை 250 சதவீதம் அதி கரித்துள்ளது. ஆனால் இதை தடுக்க ஒரு துரும்பைக் கூட தமிழக அரசு எடுத்துப் போட வில்லை. இந்த குற்றங்களை எப்படி குறைப்பது என பெண்கள் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தி தீர்வு காண நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்,  ஞாயிறன்று நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் பேசுகையில் வலியுறுத்தினார். நாகர்கோவிலில் ஞாயிறன்று மார்ச் 8 சர்வ தேச பெண்கள் தினத்தையொட்டி அனைத்து மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நடை பெற்ற பேரணி - பொதுக்கூட்டத்தில் பங்கேற்க  வந்த அவர், செய்தியாளர்களிடம்கூறியதாவது: பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக முதல்வரை சந்திக்க இரண்டு மாத கால மாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முயற்சித்தும், முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. வன்முறையை தடுப்ப தில் இந்த அரசு கவலையற்றுகிடக்கிறது. காவல்துறையின் நடவடிக்கையும் வன்முறை யை தடுப்பதில் திருப்தியளிக்கவில்லை. குமரி மாவட்ட ஆட்சியர் மகளிர் தின கூட்டத்தில் ‘வரதட்சணை கூடாது’ என பேசி யுள்ளது மிக நல்ல விஷயம். ஆனால் பெண்கள் கூட்டத்தில் ‘வரதட்சணை கூடாது’ என பேசு வதற்கு பதிலாக ஆண்களின் கூட்டம் போட்டு அங்கு வரதட்சணை கூடாது, தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பேசுவதுதான் சரியாக இருக்கும்.  பாலியல் வன்முறை வழக்குகளில் சாதாரண மாக 25 முதல் 30 சதவீதம் குற்றவாளி களுக்குத்தான் தண்டனை கிடைக்கிறது. 70 சதவீதம் குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை உள்ளது. மரண தண்டனை என்று கூட போக வேண்டாம், இருக்கின்ற தண்டனைகளை குற்றம் செய்தவருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நிலையை கொண்டுவந்தாலே அது குற்றம் செய்பவர்களை தடுக்கும். தண்டனை விகிதாச்சாரம் குறைவாக இருப்பதுதான் குற்றம் நடக்க முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உட்பட பங்கேற்று தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் விவரித்த அவர் அதுகுறித்து கூறியதாவது: 9 ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் கோட்டை முன்பு மார்ச் 9 (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டம் நடக்கிறது. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கிலிடப்பட்ட தின மான மார்ச் 23 ஆம் தேதி மக்களின் குடியுரிமை பாதுகாப்புக்காக, மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, பகத்சிங் கண்ட சமதர்ம சமூக கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  குடியுரிமை திருத்த சட்டம் என்பது இஸ்லாமி யர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை அல்ல. அனைத்து சமுதாய மக்களையும் பாதிக்கும் விஷயம். ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங் களிலும் வீடு வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும் பாதிப்பை விளக்கும் பிரச்சாரம் நடைபெற உள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் பல மையங்களில் 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம் மார்ச் 17 காலை 10 மணியிலிருந்து 18 காலை 10 மணி வரை நடைபெறுகிறது. இந்த பிரச்சனையில் இஸ்லாமியர்களுக்கோ, மற்ற சமூகத்தினருக்கோ பாதிப்பே வராது  என தமிழக முதல்வரும் நடிகர் ரஜினி காந்தும் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக் கின்றனர். எப்படி பாதிப்பு வரும் என்று நாங்கள்  விளக்குகிறோம். எப்படி பாதிப்பு வராது என்று  அவர்கள் விளக்க வேண்டும். எப்படி பாதிப்பு வராது என்றே சொல்லாமல் பாதிப்பு வராது என்று  சொல்லுவது மக்கள் மத்தியில் இருக்கும் பதற்றத்தை சரி செய்ய உதவாது. ஆகவே இந்த  சட்டமன்ற கூட்டத்தொடரில் நிச்சயமாக தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.
நீதி விசாரணை தேவை
இப்பிரச்சனை தொடர்பாக தில்லியில் நடந்த  திட்டமிட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம், காயமடைந்தவர் களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கான ஏற்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இடதுசாரிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் செய்து வருகின்றன. அரசாங்கம் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இந்த பிரச்ச னையில் காவல்துறை முழுக்க முழுக்க வன் முறையாளர்களுக்கு ஆதரவாக நின்றது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இது சம்பந்த மான விசாரணையை காவல் துறையின் கையில் ஒப்படைக்காமல் உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கின் நீதி விசாரணை நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இந்த வன்முறை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
வன்முறையை தூண்டும் பாஜக தலைவர்கள்
நாகர்கோவிலில் சிஏஏ வுக்கு ஆதரவு தெரி வித்து நடத்திய போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிறிஸ்தவர் களுக்கு எதிராக மத தலைவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி யுள்ளார். அதுபோன்று எச்.ராஜா பேசுகிற எல்லா  பேச்சுக்களும் வன்முறையை தூண்டும் வகை யில் உள்ளது. ஏன் இந்தஇருவர் மீதும் வழக்குப் பதிய காவல் துறை தயங்குகிறது?  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், என்.எஸ்.கண்ணன், உஷா பாசி ஆகியோர் உடனிருந்தனர்.    (ந.நி.)