tamilnadu

img

சட்டவிரோதமாக இயங்கிய 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல்

சென்னை, பிப். 29- சென்னை உயர்நீதிமன்ற உத்தர வுப்படி, திருச்சியில் சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு பொதுப்பணித்துறை அதி காரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த  உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில்  ஆஜராக நேரிடும் என சென்னை உயர்நீதி மன்றம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை(பிப்.29)  திருச்சி மாவட்டத்தில் அனுமதி பெறாமல்  இயங்கிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக ளுக்கு பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து வரு கின்றனர். அவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து அனுமதியின்றி செயல்பட்டு வரும்  23 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.