tamilnadu

img

தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

இங்கிலாந்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 35-வது லீக் ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கி உள்ளது.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்து விட்டது. இதை அடுத்து, 2 வெற்றி, 2 தோல்வி, 2 முடிவில்லை என்று 6 புள்ளிகள் பெற்றுள்ள இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.