அர்னாப் கோஸ்வாமியை விடுதலை செய்வதற்கு என்ன அளவுகோலை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியதோ, அதே அளவுகோலை, எவ்வித தண்டனையும் இல்லாமல் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் பிரச்சனையிலும் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் தனிநபர் உரிமையையும் உச்சநீதிமன்றம் பாதுகாக்க வேண்டும்.
***********************
பீகார் தேர்தலில் மக்கள் தன்னுடைய கொள்கைகளை அங்கீகரித்து வெற்றி பெற வைத்துள்ளனர் என பிரதமர் மோடி மார்தட்டிக் கொள்கிறார். ஆனால் 3.14 கோடி பதிவான வாக்குகளில் பாஜக கூட்டணிக்கும் ராஷ்ட்ரிய ஜனதாதள/ இடதுசாரிகள்/ காங்கிரஸ் கூட்டணிக்கும் வாக்கு வித்தியாசம் வெறும்0.03% அதாவது 12,678 மட்டும்தான். இதுதான் உண்மை!
***********************
பண மதிப்பு நீக்கத்திலிருந்து ஜி. எஸ். டி. ஊடாக தான் தோன்றித்தனமான ஊரடங்கு வரை மோடியின் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை சிதைத்துவிட்டன. சென்ற காலாண்டில் ஜி. டி. பி. 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.அடுத்த காலாண்டில் மேலும் 8.6 சதவீதம் வீழ்ச்சி அடைந் துள்ளது. விடுதலைக்கு பின்னர் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாகவே பொருளாதார மந்தம் இந்தியாவை பாதித்துள் ளது என்று ரிசர்வ் வங்கி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மோடி அரசு என்ன செய்யப் போகிறது?
++++++++++++++++++++++
சமூக வலைத்தளங்களில் படிக்க...
முகநூல்: https://www.facebook.com/ComradeSRY/
டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury