tamilnadu

உ.பி.யில் கொல்லப்பட்ட சிறுமி  கும்பல் பலாத்காரம்  செய்யப்பட்டது நிரூபணம்

 லக்னோ, ஜூன் 9- உத்தரப்பிரதேசத்தின் அலிகரில் 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டரை வயது சிறுமி கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.  கடந்த 31 ஆம் தேதி மாயமான சிறுமி, 2 ஆம் தேதி கைகள் முறிக்கப்பட்ட நிலையிலும், விழிகள் வெளிவந்த நிலையிலும் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 10 ஆயி ரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்து கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவன் ஏற்கெனவே, தனது சொந்த மகளையே பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.