உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏவின் உதவியாளர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் ரேஷன் கடை அமைப்பது தொடர்பான கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டதையடுத்து உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் முன் பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங்கின் உதவியாளர் தீரேந்திர சிங் ஒருவரை துப்பாக்கியால் 20 முறை சுட்டார். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தீரேந்திர சிங் தலைமறைவாகி உள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.