உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76.4 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பல பகுதிகளில் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மாநிலத்தின் முக்கிய நகரங்களான வாரணாசி, ரேபரேலி, அமேதி, லக்னோ, உன்னாவ் ஆகிய நகரங்கள் உள்பட பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலம் முழுவதும் கடந்த இரு நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில நிவாரண ஆணையர் ஜி.எஸ்.பிரியதர்ஷி தெரிவித்துள்ளனர்.