tamilnadu

வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தை உடனடியாக மீட்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

உதகை, நவ. 3- தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக வனத்துறையி டம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தை டேன்டீ நிறுவனம் உட னடியாக மீட்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட குழு கூட்டம் உதகையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜன் தலைமையில் அண்மையில்  நடைபெற்றது. கூட் டத்தில் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலா ளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதில், டேன்டீ எனப்படும் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக நிறு வனத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங் களாக டேன்டீ நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சேரம்பாடி, சேரங்கோடு ஆகிய இடங்களில் தேயிலை பயிரிடப்பட்டிருந்த 276.78 நிலங்கள் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு தொழிலாளர்கள் பற்றாக்குறை எனும் காரணத்தினால் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ள நிலங்களை உடனடியாக நிறுவனம் மீண்டும் பெற்று தேயிலை சாகுபடி துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். அனைத்து தற்காலிக தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் கழிப் பறை வசதிகளை செய்து தர வேண்டும்.  ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் சிறப்புப் பகுதிகள் மேம்பாட்டு நிதியை இதற்கென ஒதுக்கீடு செய்ய வேண்டும். சேரம்பாடியில் உள்ள மருத்துவ மனையை பராமரித்து, மாநில சுகாதாரத் துறைக்கு ஒப்ப டைக்கப்பட்டு மருத்துவமனையின் தரம் உயர்த்துவது என்ற முடிவினை விரைந்து அமலாக்கிட வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அனைத்து பண பலன்களையும் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இந்நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அரசு தொகுப்பு வீடுகளை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல கட்ட தொடர் போராட் டங்களை நடத்திடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது.