tamilnadu

img

கிராம உதவியாளரை தாக்கிய காவல்துறையினருக்கு கண்டனம்

உடுமலை, மே 20-உடுமலையில் கிராம உதவியாளரைத் தாக்கிய காவல்துறையினரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆவேசஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள முக்கோணம் பகுதியைச்சேர்ந்தவர் கிராம உதவியாளர் செல்வராஜ். இவர் கடந்த 13ம் தேதியன்று வீட்டில் இருந்தபோது உடுமலை காவல்துறை (உளவு பிரிவு) தலைமை காவலர் ஜெயபிரகாஷ் மற்றும் காவல் துறை நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பாலகிருஷணன் ஆகியோர் திடீரென செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரை சாதி ரீதியாக இழிவாக பேசி உடுமலை காவல் நிலையத்திற்குக் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு அவரை இரவு முழுவதும்வைத்து கடுமையாகத் தாக்கி உள்ளனர்.இந்நிலையில், எந்த குற்றமும் செய்யாத அரசு ஊழியரை சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசி, கடுமையாகப் தாக்கிய உடுமலை காவல்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செல்வராஜ் மீது பொய்யாக பதிவு செய்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் மற்றும் கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் திங்களன்றுஉடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராமஉதவியாளர் சங்கத்தின் வட்டக்கிளைசெயலாளர் திலிப்குமார் தலைமைதாங்கினார். மாநில தலைவர் ராஜசேகர், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்சராஜ், உடுமலை செயாலளர் பாலசுப்பிரமணியம்மற்றும் அன்வர்ஹக், நாகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்தஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு காவல்துறையினர் அராஜக நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.