உடுமலை, செப். 7- பணி நிறைவு பெற்று ஓராண்டாகியும் ஓய்வூதியம் வழங்காததைக் கண்டித்து உடுமலை ஒன்றிய அலு வலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் திங்களன்று காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், புங்க முத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணி யாற்றிவர் பெரிய காளிமுத்து. மடத்துக்குளம் ஒன்றி யம், கடத்தூர் ஊராட்சில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர் கண்ணையன் ஆகிய இருவரும் பணி நிறைவு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் ஆகிய பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் முறையான மருத் துவச் சோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஒன்றிய அலுவலகத்தில் திங்களன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்டப் பொருளாளர் தண்டபாணி, ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தூய் மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.