tamilnadu

img

வங்கிக் கடன் தவணைத் தொகை மீதான கூடுதல் வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

வங்கிக் கடனுக்கான தவணைத் தொகை மீதான கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யப்படுமா என்று ரிசர்வ் வங்கியிடமும், நிதி அமைச்சகத்திடமும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் போது, அனைத்து நிறுவனங்கள் முடக்கப்பட்டன. பலர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், 6 மாத கடன் தவணைகளை செலுத்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலம் நீட்டிக்கப்பட்டது.

ஆனால் வங்கிகளோ, தவணை ஒத்திவைப்பு காலத்துக்கும் ஒரு வட்டியை வசூலிப்போம் என நடவடிக்கை மேற்கொண்டது. இது வங்கி கடன் பெற்றவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வங்கிக் கடனுக்கான தவணைத் தொகை மீதான கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யப்படுமா என்று ரிசர்வ் வங்கியிடமும், நிதி அமைச்சகத்திடமும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம், 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.